தமிழகம்

24 மணி நேரத்தில்‌ காற்றழுத்த தாழ்வுப்‌ பகுதி உருவாகும்; மழை எச்சரிக்கை

செய்திப்பிரிவு

தமிழகத்தில் இன்று 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில்,” தெற்கு வங்க கடற்பகுதியில்‌ (4.5 கிலோ மீட்டர்‌ உயரம்‌ வரை) நிலவும்‌ வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அடுத்த 24 மணி நேரத்தில்‌ காற்றழுத்த தாழ்வுப்‌ பகுதியாக மாறக்கூடும்‌. இது மேலும்‌ மேற்கு வடமேற்கு திசையில்‌ வரும்‌ நாட்களில்‌ தமிழக கரையை நோக்கு நகரக்‌ கூடும்‌.

இதன்‌ காரணமாக இன்று ராமநாதபுரம்‌, நாகப்பட்டினம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழை பெய்யும். மதுரை, புதுக்கோட்டை,
சிவகங்கை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி
மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய வட கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை பகுதுகளில்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌, உள்‌
மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசான மழையும்‌ பெய்யக் கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்தகுற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

குமரிக்கடல்‌, தென்மேற்கு வங்கக்‌ கடல்‌ மற்றும்‌ தென்‌ தமிழக கடலோரப்‌ பகுதிகளில்‌ சூறாவளி காற்று மணிக்கு 40 முதல்‌ 50 இலோ மீட்டர்‌ வேகத்துல்‌ வீசக்கூடும்‌. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கொள்ளப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT