தமிழகம்

இலங்கை தூதரகத்தை மீனவர்கள் முற்றுகை: தாக்குதல், கைது செய்யப்படுவதற்கு எதிர்ப்பு- தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

செய்திப்பிரிவு

இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை கண் டித்தும், இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும், சிறைப்பிடித்து வைக்கப்பட்டுள்ள விசைப் படகுகளை விடுவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தியும் நேற்று காலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் நடத்தினர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சி புரம், நாகை, புதுக்கோட்டை, தஞ்சா வூர், ராமநாதபுரம், காரைக்கால், சிவகங்கை, கடலூர் ஆகிய மாவட் டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரம் மீனவர்கள் இதில் கலந்து கொண் டனர். அனைத்திந்திய மீனவர் சங்க கூட்டமைப்பின் ஒருங்கிணைப் பாளர் பாரதி இந்த போராட்டத்துக்கு தலைமை தாங்கினார். மதிமுக, மனித நேய மக்கள் கட்சி, காங்கிரஸ், தமாகா ஆகிய கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும் போராட்டத்தில் கலந்து கொண்டு மீனவர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

மீனவர்களின் போராட்டத்தை ஒட்டி தூதரகம் முன்பு தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுமார் 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். மீன வர்கள் தடுப்பு கம்பியை தள்ளிக்கொண்டு தூதரகத்தை முற்றுகையிட சென்றனர். இதனால் மீனவர்களுக்கும், போலீஸாருக் கும் இடையே தள்ளுமுள்ளு ஏற் பட்டது.

போராட்டத்தின்போது ஒரு பெண் உட்பட 3 பேர் உடலில் மண்ணெண் ணெய் ஊற்றி தீ வைக்க முயற்சி செய்தனர். அவர்களை போலீஸார் தடுத்து கைது செய்தனர். தொடர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 700 மீனவர்களை போலீஸார் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.

போராட்டத்துக்குத் தலைமை வகித்த பாரதி கூறும்போது, “தமிழக மீனவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 78 விசைப் படகு களையும், சிறையில் உள்ள 21 மீன வர்களையும் உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் இலங்கை அரசு அதற்கான முயற்சி களை எடுக்கவில்லை” என்றார்.

SCROLL FOR NEXT