புதுக்கோட்டை மாவட்டம் கோட் டைப்பட்டினம் விசைப்படகு மீன வர்கள் 4 பேரை இலங்கை கடற் படையினர் நேற்று சிறைபிடித் தனர்.
கோட்டைப்பட்டினம் மீன்பிடித் தளத்தில் இருந்து சுமார் 180 விசைப்படகுகளில் நேற்று முன் தினம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். அதில், நெடுந்தீவு அருகே ஒரு படகில் மீன் பிடித்துக்கொண்டிருந்த கோட்டைப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் எல்.ஆரோக்கிய ராஜ்(54), எல்.சாமுராஜ்(26), ஆர்.சிவக்குமார், ஐ.காஜா(55) ஆகிய 4 பேரை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களது படகும் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவம் மீனவர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.