தமிழகம்

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறுமா?- சென்னை வானிலை ஆய்வு மையம் பதில்

செய்திப்பிரிவு

காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் வாய்ப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலசந்திரன் பாலச்சந்திரன் பேசும்போது,

” காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை கடலூர் அருகே கரையை கடக்கும்.

இதன் காரணமாக தரைக் காற்று மணிக்கு 30 கிமீ வேகத்தில் நாளை காலை முதல் வீசும். சென்னையில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும். இதனால் சென்னைக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை, புதுச்சேரி, காரைக்கால் போன்ற மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் . இந்த காற்றழுத்த தாழ்வு நிலை புயலாக மாறும் வாய்ப்பு தற்போதைக்கு இல்லை.

கடந்த 24 மணி நேரத்தில் 5 இடங்களில் அதி மிக கனமழையும், 21 இடங்களில் மிக கனமழையும், 40 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. தென் மேற்கு வங்க கடல், மன்னார் வளைகுடா அகிய பகுதிகளில் மீனவர்கள் கடலில் மின் பிடிக்க போக வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.

SCROLL FOR NEXT