தமிழகம்

மத்திய அரசுத் துறைகளில் போட்டித் தேர்வு மூலம் 731 சுருக்கெழுத்தர்கள் நியமனம்

பணி​யாளர் தேர்​வாணை​யம் அறி​விப்பு

செய்திப்பிரிவு

சென்னை: மத்​திய அரசுத் துறை​களில் போட்​டித் தேர்வு மூலம் 731 சுருக்​கெழுத்​தர்​களை நியமனம் செய்​வதற்​கான அறி​விப்பை அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் வெளி​யிட்​டுள்​ளது.

இதுதொடர்​பாக மத்​திய அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் (எஸ்​எஸ்​சி) வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: மத்​திய நிதி அமைச்​சகத்​தின்​கீழ் உள்ள வரு​வாய்த் துறை, பணி​யாளர் மற்​றும் பயிற்​சித் துறை ஆகிய​வற்​றில் குரூப்​-சி, குரூப்​-டி பிரிவு​களில் 731 சுருக்​கெழுத்​தர்​கள் நியமனம் செய்​யப்பட உள்​ளனர். இதற்​கான போட்​டித் தேர்​வுக்கு ஆன்​லைனில் விண்​ணப்​பங்​கள் வரவேற்​கப்​படு​கின்​றன.

விண்​ணப்​ப​தா​ரர் பிளஸ் 2 தேர்ச்சி பெற்​றிருக்க வேண்​டும். அதோடு, சுருக்​கெழுத்​துப் பயிற்​சி​யும் அவசி​யம். குரூப்​-டி பிரிவுக்கு வயது வரம்பு 27, குரூப்​-சி பிரிவுக்கு 30 என நிர்​ண​யம் செய்​யப்​பட்​டுள்​ளது. வயது வரம்​பில் ஓபிசி பிரி​வினருக்கு 3 ஆண்​டு​கள், எஸ்​சி, எஸ்டி பிரி​வினருக்கு 5 ஆண்​டு​கள், மாற்​றுத் திற​னாளி​களுக்கு 10 ஆண்​டு​கள் தளர்வு அளிக்​கப்​படும். உரிய வயது, கல்​வித் தகுதி உடைய​வர்கள் https://ssc.gov.in என்ற இணை​யதளம் வாயி​லாக மே 15-ம் தேதிக்​குள் ஆன்​லைனில் விண்​ணப்​பிக்க வேண்​டும்.

முதல்​கட்​ட​மாக, கணினி வழி எழுத்​துத் தேர்வு ஜூலை - ஆகஸ்​டில் நடை​பெறும். பொது நுண்​ணறி​வுத் திறன், ரீசனிங், பொது அறி​வு, ஆங்​கில மொழி ஆகிய 3 பாடங்​களில் இருந்து வினாக்​கள் இடம்​பெறும். இதில் தேர்ச்சி பெறு​வோருக்கு சுருக்​கெழுத்து தேர்வு நடத்​தப்​படும் என்று எஸ்​எஸ்சி அறி​வித்​துள்​ளது.

SCROLL FOR NEXT