தமிழகம்

தேர்தலில் எந்த தாக்கத்தையும் ரஜினியால் ஏற்படுத்த முடியாது: ஈவிகேஎஸ் இளங்கோவன் உறுதி

செய்திப்பிரிவு

சட்டப்பேரவைத் தேர்தலில் நடிகர் ரஜினிகாந்தால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது என தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:

திமுக - காங்கிரஸ் கூட்டணியில் தேமுதிக நிச்சயம் இணையும் என திமுக தலைவர் கருணாநிதி நம் பிக்கை தெரிவித்துள்ளார். தேமுதிக கண்டிப்பாக எங்களுடன் வருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கும் உண்டு. திமுக - காங்கிரல் கூட்டணியில் இணைய வேண்டும் என விஜயகாந் துக்கு பலமுறை அழைப்பு விடுத்துள்ளேன். இப்போதும் அழைக்கிறேன்.

இப்போது விஜயகாந்தை பற்றி தான் எல்லோரும் பேசிக் கொண்டிருக் கிறார்களே தவிர, ரஜினிகாந்தை பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. சட்டப்பேரவைத் தேர்தலில் ரஜினியால் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்த முடியாது. கடந்த தேர்தல்களிலும் அவர் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் தயாராகி வருகிறது. தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்கவில்லை. காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஓரிரு வாரங்களில் வெளியிடப்படும்.

இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

SCROLL FOR NEXT