வாளையார் மனோஜ் 
தமிழகம்

கோடநாடு வழக்கு: வாளையாறு மனோஜுக்கு நிபந்தனை தளர்த்தி ஜாமீன்

ஆர்.டி.சிவசங்கர்

கோடநாடு கொலை - கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது நபரான வாளையார் மனோஜுக்கு நிபந்தனை தளர்த்தி ஜாமீன் வழங்கப்பட்டது.

கோடநாடு கொலை - கொள்ளை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டாவது நபரான வாளையார் மனோஜுக்கு கடந்த மாதம் உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் வழங்கிய நிலையில், அவருக்கு உத்தரவாதம் அளிக்க யாரும் முன்வரவில்லை. இதனால், நிபந்தனைகளை தளர்த்த கோரி அவரது வழக்கறிஞர் முனிரத்னம் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நேற்று (செப். 13) மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு மீதான விசாரணை இன்று (செப். 14) காலை 10.30 மணிக்கு உதகை மாவட்ட அமர்வு நீதிமன்ற நீதிபதி சஞ்சய் பாபா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இதை விசாரித்த நீதிபதி, நீலகிரி மற்றும் கோவையில் இருந்து ஜாமீன் உத்தரவாதம் அளிக்க யாரும் இல்லாத நிலை இருப்பதால் கேரளாவில் இருந்து வாளையார் மனோஜின் உறவினர்கள் ரூ. 50 ஆயிரம் சொத்து மதிப்பை உத்தரவாதமாக சொத்து ஆவணம் அளித்து ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என உத்தரவிட்டார்.

SCROLL FOR NEXT