தமிழகம்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்‌ முனைவர்‌ நா.புவியரசன்‌ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தென்மேற்குப் பருவக்காற்று காரணமாக

06.09.2021:

மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி ஆகிய 6 மாவட்டங்கள்‌ மற்றும்‌ வட மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

07.09.2021:

மேற்குத்தொடர்சசி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, தேனி, திண்டுக்கல்‌, தென்காசி ஆகிய 6 மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

08.09.2021:

கடலோர மாவட்டங்கள்‌, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌, ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

09.09.2021, 10.09.2021:

தென்‌ மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌, ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ லேசான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 34 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

வடமேற்கு மற்றும்‌ அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல்‌ பகுதியில்‌ உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியின்‌ காரணமாக
வங்கக் கடல்‌ பகுதிகளில்,‌

06.09.2021:

மத்திய மேற்கு மற்றும்‌ அதனை ஒட்டிய தென்‌மேற்கு வங்கக் கடல்‌ பகுதிகளில்‌ சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல்‌ 50 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌. மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

மேலும்‌, விவரங்களுக்கு imdchennai.gov.in என்ற இணையதளத்தைக் காணலாம்''.

இவ்வாறு புவியரசன்‌ தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT