கரோனா தொற்று சூழல் காரணமாக வீடுகளிலேயே இருக்கும் பெண்கள் இணையவழியில் பங்கேற்று பயன்பெறும் வகையில், ‘இந்து தமிழ் திசை’ நாளிதழ், ராவ் மருத்துவமனை இணைந்து நடத்தும் ‘மகளிர் நல வலைத் தொடர்’ சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சி செப்.8-ம் தேதி (புதன்கிழமை) மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.
பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆலோசனை
இந்த நிகழ்வில், ’கருவுறாமை காரணங்களும் தீர்வுகளும்’ எனும் தலைப்பில் பெண் கருவுறாமைக்கான காரணம், ஆண் மலட்டுத் தன்மைக்கு காரணம்,தம்பதியருக்கு என்ன பரிசோதனைகள் செய்ய வேண்டும், ஆண் மலட்டுத்தன்மையை போக்க என்னசெய்யலாம் என்பன உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மருத்துவர்கள் ஆலோசனை வழங்குகின்றனர். மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம் குறித்து, இத்துறையில் பல்லாண்டுகால அனுபவமிக்க ராவ் மருத்துவமனையின் இயக்குநர் மற்றும் தலைமை ஆலோசகர் டாக்டர் ஆஷா ராவ், மற்றும் கருவுறுதல் மற்றும் மகளிர் மருத்துவம் எண்டோஸ்கோப்பி குறித்து ராவ் மருத்துவமனையின் மூத்த ஆலோசகர் டாக்டர் தாமோதர் ராவ் ஆகியோர் ஆலோசனைகளை வழங்க உள்ளனர்.
பங்கேற்க கட்டணம் கிடையாது
இந்நிகழ்வில் பெண்கள் மட்டுமே பங்கேற்க முடியும். இதில் பங்கேற்க விரும்பும் பெண்கள் https://bit.ly/3yKk25U என்ற லிங்க்கில் பதிவு செய்யவேண்டும். பங்கேற்க கட்டணம் கிடையாது. கூடுதல் விவரங்களுக்கு 9003966866 என்ற செல்பேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.