தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் பாமக வேட்பாளர் களுக்கான நேர்காணல் நேற்று தொடங்கியது. விழுப்புரம் மாவட் டம் திண்டிவனம் அருகே தைலா புரம் தோட்டத்தில் நேர்காணலை கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தொடங்கி வைத்தார். சென்னையில் உள்ள திரு.வி.க. நகர் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்த சென்னை மாவட்ட பாமக இளம் பெண்கள் தலைவர் வனிதாமணி மற்றும் எண்ணூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த மாநில மகளிரணி செயலாளர் சீதா ரமணி ஆகியோரிடம் நேர்காணல் நடத்தினார்.
அதன் பிறகு, நேர்காணல் தொடர்பாக டாக்டர் ராமதாஸ் பேசும்போது, “நேர்காணல் 10-ம் தேதி வரை நடைபெறுகிறது. 5 குழுக்கள் இந்த நேர்காணலை நடத்துகின்றன. முதலில் 46 தனித் தொகுதி வேட்பாளர்களுக்கான நேர்காணல் நடைபெறுகிறது. விஞ்ஞானரீதியில் நேர்காணல் இருக்கும். எந்த நிலையிலும் தமிழகத்துக்கு பாமக வழிகாட்டி யாக இருக்கும்” என்றார்.
இதனைத் தொடர்ந்து, கூட்ட ணிக்கு திமுக தூது அனுப்பியதாக செய்தி வெளியானது குறித்து ராமதாஸிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ராமதாஸ், “திருமண விழா ஒன் றுக்கு அழைப்பிதழ் அளிக்க வந்தார் கள். இது வேறு. அரசியல் வேறு. நான்கூட என் குடும்ப விழாவுக்கு அழைப்பிதழ் கொடுத்தேன்” என்று குறிப்பிட்டார்.
நேர்காணல் தொடர்பாக பாமக முதல்வர் வேட்பாளர் அன்புமணி ராமதாஸ் பேசும்போது, “7618 விருப்ப மனுக்கள் பெறப்பட்டன. பெண்கள் 1,028 பேரும், தாழ்த் தப்பட்ட, பழங்குடி இனத்தவர் 905 பேரும் விருப்ப மனு அளித்துள் ளனர்.
நேர்காணல் முடிந்து முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை இம் மாதம் வெளியிடுவோம். இளைஞர் கள், பெண்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்படும். திமுக, அதிமுக தவிர எந்தக் கட்சி வந்தாலும் எங்களுடைய கூட்டணியில் ஏற்றுக் கொள்வோம். எங்களை தவிர வேறு எந்தக் கட்சிக்கும் தனியாக போட்டியிட திராணியும் தன்னம்பிக்கையும் இல்லை” என்றார்.