கிறிஸ்துதாஸ் 
தமிழகம்

பாலியல் புகாரில் பாதிரியார் கைது

செய்திப்பிரிவு

சிவகாசியில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரின்பேரில் பாதிரியாரை போலீஸார் கைது செய்தனர்.

சிவகாசி ரிசர்வ் லைன் நேருஜி நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ் (43). அப்பகுதியில் உள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். அண்மையில் இவரை வில்லிபுத்தூர் இந்திரா நகரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் சந்தித்துள்ளனர். அப்போது அக்குடும்பத்தைச் சேர்ந்த 11 வயது சிறுமிக்கு பாதிரியார் கிறிஸ்துதாஸ் பாலியல் துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் கூற, அவர்களது புகாரின்பேரில் வில்லிபுத்தூர் அனைத்து மகளிர் போலீஸார், போக்ஸோ சட்டத்தின்கீழ் பாதிரியாரை கைது செய்தனர்.

SCROLL FOR NEXT