தமிழகம்

4 மாவட்டங்களுக்கு கனமழை வாய்ப்பு; மீனவர்களுக்கு எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்

செய்திப்பிரிவு

நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர்‌ முனைவர்‌ நா.புவியரசன்‌ இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

''தென்மேற்குப் பருவக்காற்று மற்றும்‌ வெப்பச் சலனம்‌ காரணம்

06.08.2021

நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌, ஏனைய மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர்‌, தென்காசி மாவட்டங்கள்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும் பெய்யக்கூடும்‌.

07.08.2021, 08.08.2021

நீலகிரி, கோயம்புத்தூர்‌, தேனி, திண்டுக்கல்‌, சேலம்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழையும்‌, ஏனைய மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய திருப்பூர்‌, தென்காசி மாவட்டங்கள்‌ மற்றும்‌ உள் மாவட்டங்களில்‌ ஒருசில இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில் ஒருசில இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

09.08.2021

மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, தென்காசி மாவட்டங்கள்‌, உள்‌ மாவட்டங்களில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிதமான மழையும்‌, கடலோர மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

10.08.2021:

மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய நீலகிரி, கோயம்புத்தூர்‌, திருப்பூர்‌, திண்டுக்கல்‌, தேனி, தென்காசி மாவட்டங்கள்,‌ கடலோர மாவட்டங்கள் மற்றும்‌ அதனை ஒட்டிய உள்‌ மாவட்டங்கள்‌, புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

சென்னை நிலவரம்

சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம்‌ ஓரளவு மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒருசில பகுதிகளில்‌ இடி, மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. அதிகபட்ச வெப்பநிலை 36 மற்றும்‌ குறைந்தபட்ச வெப்பநிலை 27 மகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்‌.

மீனவர்களுக்கான எச்சரிக்கை :

வங்கக் கடல்‌ பகுதிகள்‌:

06.08.2021, 07.08.2021: தென்‌மேற்கு வங்கக் கடல்‌ மற்றும்‌ தென்‌ கிழக்கு இலங்கை பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 35 முதல்‌ 45 கிலோ மீட்டர்‌ வேகத்தில்‌ வீசக்கூடும்‌.

மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன்‌ செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்‌.

அரபிக் கடல்‌ பகுதிகள்‌:

06.08.2021 முதல்‌ 10.08.2021 வரை: தென்‌மேற்கு, வடக்கு மற்றும்‌ மத்திய மேற்கு அரபிக் கடல்‌ பகுதிகளில்‌ பலத்த காற்று மணிக்கு 50 முதல்‌ 60 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ இடையிடையே 70 கிலோ மீட்டர்‌ வேகத்திலும்‌ வீசக்கூடும்‌.

மீனவர்கள்‌ இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்‌''.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT