தமிழகம்

சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் இன்று தாக்கல்

செய்திப்பிரிவு

தமிழக சட்டப்பேரவையில் இடைக் கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்கிறார்.

தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் ஜனவரி 20-ம் தேதி தொடங்கியது. பேரவையில் ஆளுநர் கே.ரோசய்யா உரையாற்றினார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 3 நாட்கள் விவாதம் நடந்தது. விவாதங்களுக்கு பதில் அளித்து முதல்வர் ஜெயலலிதா 22-ம் தேதி உரையாற்றினார். அத்துடன் தேதி குறிப்பிடப்படாமல் பேரவை ஒத்திவைக்கப்பட்டது.

வழக்கமாக, ஆளுநர் உரை யைத் தொடர்ந்து பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். ஆனால், பொதுத் தேர்தல் நடக்கவுள்ளதால் இப்போது முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. தேர்தல் முடிந்து புதிய அரசு பொறுப்பேற்கும் வரையி லான அரசின் செலவுகளுக்கு நிதி ஒதுக்கும் வகையில், இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அடுத்து அமையும் புதிய அரசு, முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

இந்த சூழ்நிலையில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்குகிறது. இடைக்கால பட்ஜெட்டை நிதி யமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட திட்டங் களை இந்த ஆண்டு செயல்படுத்து வதற்கு இதில் நிதி ஒதுக்கப்படும். இது தவிர, தேர்தலை கருத்தில் கொண்டு சில அறிவிப்புகள் வெளி யிடப்படலாம் என்றும் கூறப்படுகி றது.

பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட துடன் இன்றைய பேரவை நிகழ்ச் சிகள் முடியும். அதன் பிறகு, பிற்பகலில் பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு கூடி, கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவெடுக்கும். பேரவை நிகழ்வுகள் 4 நாட்கள் நடக்கக்கூடும் என்று தலைமைச் செயலக வட்டாரத்தில் கூறப்படுகிறது.

இது 14-வது சட்டப்பேரவை யின் கடைசி கூட்டத் தொடர் ஆகும். தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டத்தொடர் நடப்பதால், அரசு ஊழியர்கள் போராட்டம், அவிநாசி- அத்திக்கடவு திட்டம், மது விலக்கு, வெள்ள நிவாரணம் போன்றவை தொடர்பான பிரச்சி னைகளை கிளப்ப எதிர்க்கட்சிகள் காத்திருக்கின்றன.

இடைநீக்க உத்தரவை உச்ச நீதிமன்றம் ரத்து செய்துவிட்டதால் 6 தேமுதிக உறுப்பினர்களும் பங்கேற்க வாய்ப்பு உள்ளது.

SCROLL FOR NEXT