தமிழகம்

புதுச்சேரியில் 155 பேருக்கு கரோனா தொற்று: மேலும் 2 பேர் உயிரிழப்பு

அ.முன்னடியான்

புதுச்சேரியில் புதிதாக 155 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று (ஜூலை 8) வெளியிட்ட தகவலில், ‘‘புதுச்சேரி மாநிலத்தில் 6,456 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 123, காரைக்காலில் 22, ஏனாமில் 4, மாஹேவில் 6 பேர் என மொத்தம் 155 (2.40 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் ஒருவர், காரைக்காலில் ஒருவர் என 2 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். மாஹே, ஏனாமில் உயிரிழப்பு ஏதுமில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,767 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.49 சதவீதமாக நீடிக்கிறது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 18 ஆயிரத்து 571 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 238 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,524 பேரும் என மாநிலம் முழுவதும் மொத்தம் 1,762 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதிதாக 144 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 லட்சத்து 15 ஆயிரத்து 42 (97.02 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 13 லட்சத்து 66 ஆயிரத்து 603 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 11 லட்சத்து 73 ஆயிரத்து 249 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது.

மேலும், சுகாதாரப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 5 லட்சத்து 56 ஆயிரத்து 603 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT