தமிழகத்தில் இன்று 3,867 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. சென்னையில் 222 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 4,382 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை. 24,96,287. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 5,33,432 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 24,27,988.
இன்று வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் யாருக்கும் தொற்று இல்லை. இதுவரை வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து 44,45,295 பேர் வந்துள்ளனர்.
சென்னையில் 222 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று சென்னை உள்ளிட்ட 37 மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை வந்துள்ளது. சென்னையைத் தவிர 36 மாவட்டங்களில் 3,645 பேருக்குத் தொற்று உள்ளது.
* தற்போது 69 அரசு ஆய்வகங்கள், 203 தனியார் ஆய்வகங்கள் என 272 ஆய்வகங்கள் உள்ளன.
இந்த நிலையில் தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை, நிலை குறித்து இன்று பொது சுகாதாரத்துறை வெளியிட்ட அறிவிப்பு:
* தனிமைப்படுத்துதலில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 35,294.
* மொத்தம் எடுக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,26,33,034.
* இன்று ஒரு நாளில் எடுக்கப்பட்ட சோதனை மாதிரி எண்ணிக்கை 1,56,330.
* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கை 24,96,287.
* இன்று தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 3,867.
* சென்னையில் தொற்று உறுதியானவர்கள் எண்ணிக்கை 222.
* சென்னையில் இன்று சிகிச்சையில் பெறுபவர்கள் எண்ணிக்கை (தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட): 2,168.
* மொத்தம் தொற்று உள்ளவர்கள் எண்ணிக்கையில் ஆண்கள் 14,58,980 பேர். பெண்கள் 10,37,269 பேர். மூன்றாம் பாலினத்தவர் 38 பேர்.
* தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் 2,187 பேர். பெண்கள் 1,680 பேர்.
* இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 4,382 பேர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் 24,27,988 பேர்.
* இன்று கரோனா வைரஸ் நோய்த் தொற்றினால் 72 பேர் உயிரிழந்தனர். 18 பேர், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 54 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இந்நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 33,005 ஆக உள்ளது. சென்னையில் மட்டும் மொத்தம் 8,222 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கியப் பிரச்சினையாக சுவாசப் பிரச்சினை, மாரடைப்பு, கோவிட் நிமோனியா ஆகியவை அதிக அளவு மரணத்துக்குக் காரணமாக உள்ளன. இன்று உயிரிழந்தவர்களில் 57 பேர் நீண்டகால நோயால் பாதிக்கப்பட்டிருந்தவர்களாவர். எவ்வித பாதிப்பும் இல்லாதவர் 15 பேர்.
இன்று மாநிலம் முழுவதும் காலியாக உள்ள ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் எண்ணிக்கை 40,128. காலியாக உள்ள ஆக்சிஜன் வசதி இல்லாத படுக்கைகள் எண்ணிக்கை 26,820. காலியாக உள்ள ஐசியூ படுக்கைகள் எண்ணிக்கை 6,551 என மொத்தம் காலியாக உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை 73,499 ஆகும்.
இவ்வாறு பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.