திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடந்த மாற்றுத்திறனாளிகளுக்கான கரோனா சிறப்பு தடுப்பூசி முகாமை ஆட்சியர் அமர் குஷ்வாஹா தொடங்கி வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் முகாம் நேற்று தொடங்கியது. திருப்பத்தூர் மாவட்டத்தில் 21 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் வசித்து வருகின்றனர். அவர்களுக்கான தடுப்பூசி போடும் முகாம் நேற்று தொடங்கியது.
ஆலங்காயம் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையம், ஆம்பூர் இந்து மேல்நிலைப்பள்ளி, வாணியம்பாடி நியூடவுன் ஆரம்ப சுகாதார நிலையம், ஜோலார் பேட்டை மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையம், புதுப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார மையம், நாட்றாம்பள்ளி அடுத்த பச்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலை யம், ஆண்டியப்பனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கெஜல்நாயக்கன்பட்டி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, குனிச்சி அரசுஆரம்ப சுகாதார நிலையம் ஆகிய வற்றில் மாற்றுத்திறனாளிகளுக் கான தடுப்பூசி முகாம் நேற்று தொடங்கியது.
இது தவிர மாற்றுத்திறனாளிகள் வசிக்கும் இடங்களுக்கே சுகாதாரத்துறையினர் வீடு, வீடாக சென்று தடுப்பூசி செலுத்தினர். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்.
அப்போது, அவர் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா 2-வது அலையில் இதுவரை 20 ஆயிரம் பேர் பாதிக் கப்பட்டுள்ளனர். தற்போது, கரோனா பாதிப்பு பெரும் அளவில் குறைந்துள்ளது. அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பொதுமக்கள் தவறாமல் பின்பற்ற வேண்டும். முழு ஊரடங்கால் தொற்று பாதிப்பு எதிர்பார்த்த அளவுக்கு குறைந்துள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை 1 லட்சத்து 52 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழக அரசு அறிவுறுத்தலின் பேரில், திருப்பத் தூர் மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக, 6 ஊராட்சி ஒன்றியங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளன.
அதன்படி, ஆலங்காயம் ஒன்றியத்தில் 124 மாற்றுத் திறனாளிகள், திருப்பத்தூர் ஒன்றி யத்தில் 70, கந்திலி ஒன்றியத் தில் 45, ஜோலார்பேட்டை ஒன்றி யத்தில் 48, நாட்றாம்பள்ளி ஒன்றியத்தில் 77, மாதனூர் ஒன்றி யத்தில் 89 என மொத்தம் 454 மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப்பூசிகள் செலுத்தப் பட்டுள்ளன.
இதில், ஆலங்காயம் ஒன்றியத் தில் நடைபெற்ற மருத்துவ முகாமில் அதிக மாற்றுத்திறனாளிகள் பங்கேற்று தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர்.
ஒட்டு மொத்தமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று (நேற்று) நடைபெற்ற தடுப்பூசி முகாமில் ஒரே நாளில் முதல் தவணை தடுப்பூசிகள் 5,014 நபர்களுக் கும், 2-ம் தவணை தடுப்பூசி கள் 651 நபர்களுக்கும் செலுத்தப் பட்டுள்ளது’’ என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில், வட்டார மருத்துவ அலுவலர் பசுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.