மதுரை மாநராட்சி உட்பட ஐந்து மாநகராட்சிகளின் ஆணையர்கள் கடந்த 9-ம் தேதி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டு, புதிய ஆணையர்கள் பொறுப்பில் அமர்த்தப்பட்டார்கள். இந்த நியமனங்கள் குறித்து நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேருவுக்கு பெயரளவுக்குக்கூட தெரிவிக்கப்படவில்லையாம். இதுகுறித்து அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் அதிகாரியிடம் தனது வருத்தத்தை வெளிப்படுத்திய நேரு, “இப்படி இருந்தால் அமைச்சர்களுக்கு என்ன மரியாதை இருக்கும். அமைச்சர்களை அதிகாரிகள் எப்படி மதிப்பார்கள்?” என்று சொல்லி ஆதங்கப்பட்டாராம்.
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்