பிரதிநிதித்துவப் படம் 
தமிழகம்

புதுச்சேரியில் புதிதாக 640 பேருக்கு கரோனா; 15 பேர் உயிரிழப்பு

அ.முன்னடியான்

புதுச்சேரியில் புதிதாக 640 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட 2 பேர் உட்பட 15 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 1,138 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் இன்று (ஜூன் 06 )வெளியிட்டுள்ள தகவல்:

"புதுச்சேரி மாநிலத்தில் 9,215 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரி - 470, காரைக்கால் - 136, ஏனாம் - 15, மாஹே - 19 என, மொத்தம் 640 (6.95 சதவீதம்) பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரியில் 8 பேர், காரைக்காலில் 5 பேர், மாஹேவில் 2 பேர் என, 15 பேர் உயிரிழந்துள்ளனர். ஏனாமில் புதிதாக உயிரிழப்பு ஏற்படவில்லை. இவர்களில் 6 பேர் ஆண்கள், 9 பேர் பெண்கள் ஆவர்.

மேலும், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் 2 பேர் அடங்குவர். இதனால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,628 ஆகவும், இறப்பு விகிதம் 1.49 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 9 ஆயிரத்து 79 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 1,236 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 7,034 பேரும் என, மாநிலம் முழுவதும் மொத்தம் 8,270 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

புதிதாக 1,138 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 99 ஆயிரத்து 181 (90.93 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 11 லட்சத்து 3,837 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 9 லட்சத்து 51 ஆயிரத்து 695 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என, மொத்தம் 2 லட்சத்து 83 ஆயிரத்து 729 பேருக்கு (2-வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டள்ளது.

SCROLL FOR NEXT