தமிழகம்

புதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் 21 பேர் உயிரிழப்பு; புதிதாக 1,223 பேர் பாதிப்பு

அ.முன்னடியான்

புதுச்சேரியில் புதிதாக 1,223 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 12 பெண்கள் உட்பட 21 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் இன்று(மே.28) வெளியிட்ட தகவலில்,‘‘ புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 9,012 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி – 945, காரைக்கால் – 208, ஏனாம் – 38, மாஹே – 32 என மொத்தம் 1,223 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் 5 பேர், இந்திரா காந்தி அரசு மருத்துவ கல்லூரியில் 7 பேர், ஜிப்மரில் 2 பேர், தனியார் மருத்துவ கல்லூரியில் ஒருவர், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் 5 பேர், ஏனாம் அரசு பொது மருத்துவமனையில் ஒருவர் என 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் 9 பேர் ஆண்கள், 12 பேர் பெண்கள் ஆவர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,476 ஆகவும், இறப்பு விகிதம் 1.45 ஆகவும் உயர்ந்துள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 1 லட்சத்து 1,900 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது, மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் 1, 690 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 12 ஆயிரத்து 206 பேரும் என மொத்தமாக 13 ஆயிரத்து 896 பேர் சிகிச்சையில் உள்ளனர். புதிதாக 1,779 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 86 ஆயிரத்து 528 (84.91 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 10 லட்சத்து 25 ஆயிரம் கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 8 லட்சத்து 89 ஆயிரத்து 718 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 54 ஆயிரத்து 137 பேருக்கு (2வது டோஸ் உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT