தமிழகம்

முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.111 கோடி அளிப்பு

செய்திப்பிரிவு

தமிழக வெள்ள நிவாரணப் பணிகளுக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை ரூ.111 கோடியே 8 லட்சத்து 22 ஆயிரத்து 745 ரூபாய் சேர்ந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுப் பணிகளை மேற்கொள்ள, முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, மக்கள் குரல் மற்றும் ட்ரினிட்டி மிரர் சார்பில் மொத்தம் 6 லட்சம் ரூபாய், என்.ஏ.சி, ஜுவல்லர்ஸ் 25 லட்சம் ரூபாய், கரூர் வைஸ்யா வங்கியின் 2 கோடி ரூபாய் மற்றும் வங்கி பணியாளர்களின் ஒருநாள் சம்பளமான 1 கோடி ரூபாய் என மொத்தம் 3 கோடி ரூபாய் இன்று வழங்கப்பட்டது.

செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம் 3 கோடி ரூபாய், கோயம்புத்தூர், லஷ்மி மெஷின் ஒர்க்ஸ் லிமிடெட் நிறுவனம் 2 கோடி ரூபாய், சக்தி மசாலா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 1 கோடி ரூபாய், ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் (இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 1 கோடி ரூபாய் வழங்கின.

மேலும், நிசான் மோட்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் 1 கோடி ரூபாய், கோயம்புத்தூர், பி.எஸ். கோவிந்தசாமி நாயுடு & சன்ஸ் தொண்டு நிறுவனம் 1 கோடி ரூபாய் அளித்தன.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக மொத்தம் 12 கோடியே 31 லட்சம் ரூபாய் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இன்று (15.12.2015) முதல்வர் ஜெயலலிதாவிடம் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் மற்றும் மறுவாழ்வுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை வழங்கப்பட்ட தொகை 111 கோடியே 8 லட்சத்து 22 ஆயிரத்து 745 ரூபாயாகும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT