சர்வதேச அளவில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் சென்னையில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.19 ஆயிரத்து 144-க்கு விற்கப்பட்டது.
தங்கத்தின் விலை கடந்த ஒரு மாதமாக ஏற்றமும், இறக்க முமாக இருந்து வந்தது. கடந்த 2 நாட்களாக தங்கத்தின் விலை உயர்ந்தது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக நேற்றும் தங்கத்தின் விலை உயர்ந்தது.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி 22 கேரட் தங்கம் பவுனுக்கு ரூ.88 உயர்ந்து ரூ.19 ஆயிரத்து 144-க்கு விற்கப் பட்டது. 22 கேரட் கொண்ட ஒரு கிராம் தங்கம் ரூ.2 ஆயிரத்து 393க்கு விற்கப்பட்டது. இதுவே, நேற்று முன்தினம் ரூ.2 ஆயிரத்து 382-க்கு விற்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.