தி.மலையில் நேற்று பக்தர்களின்றி வெறிச்சோடிய அண்ணாமலையார் கோயில். 
தமிழகம்

கரோனா தொற்று அச்சம் எதிரொலி அண்ணாமலையார் கோயிலுக்கு பக்தர்களின் வருகை குறைந்தது

செய்திப்பிரிவு

கரோனா தொற்று பரவல் எதிரொலியாக திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களின் வருகை குறைந்ததால் நேற்று வெறிச்சோடியது.

கரோனா ஊடரங்கு தளர்வுக்கு பிறகு தி.மலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் கடந்த 6 மாதங்களாக பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. விடுமுறை நாட்கள், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் கரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள தால், அண்ணாமலையார் கோயிலில் பக்தர்கள் கூட்டம் குறைந்துள் ளது. கடந்த 2 வாரங்களாக உள்ளூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களே சுவாமி தரிசனம் செய்து வந்தனர். விடுமுறை மற்றும் வார விடுமுறை நாட்களில் வெளியூர் பக்தர்கள் எண்ணிக்கை அதிகளவில் இருக்கும். ஆனால் நேற்றும், நேற்று முன் தினமும் வெளியூர் பக்தர்கள் வருகை குறைந்துவிட்டதால், அண்ணாமலையார் கோயில் பிரகாரம் வெறிச்சோடியது. இதே போல், கடந்த 10 மற்றும் 11 ஆகிய தேதிகளிலும் எதிரொலித்திருந்தது.

இது குறித்து கோயில் ஊழியர்கள் கூறும்போது, “கரோனா தொற்று பரவல் அதி கரித்துள்ளதால், பக்தர்களின் வருகை குறைந்துவிட்டது. மேலும், வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதுவும் பக்தர்கள் வருகை குறைவுக்கு காரணமாக உள்ளது” என்றனர்.

SCROLL FOR NEXT