கோப்புப்படம் 
தமிழகம்

இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வா? - ‘ஆல் பாஸ்’ மாணவர்கள் அதிர்ச்சி

என். சன்னாசி

மதுரை காமராசர் பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்களுக்கு செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்த வாய்ப்புள்ளதாகக் கூறப் படுவதால், ‘ஆல் பாஸ்' என அறி விக்கப்பட்ட மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

மதுரை காமராசர் பல்கலைக் கழக நிர்வாகத்தின் கீழ் 70 அரசுக் கல்லூரிகள், 30-க்கும் மேற்பட்ட தன்னாட்சிக் கல்லூரிகள் உள்ளன. இளநிலை, முதுநிலை என மொத் தம் 27 ஆயிரம் மாணவ, மாணவிகள் இறுதித்தேர்வு எழுத இருந்தனர். கரோனா ஊரடங்கால் நேரடித் தேர்வு நடத்த முடியவில்லை. இதையடுத்து, இறுதி ஆண்டு மாணவர்கள் ‘ஆல் பாஸ்' என அரசு அறிவித்தது. இதைத் தொடர்ந்து சில பல் கலைக்கழகங்கள், கல்லூரிகளில் மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் வழங்கிய நிலையில், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் 6 ஆயிரம் பேருக்கு மேல் சான்றிதழ் கள் வழங்கப்பட்டதாகக் கூறப்படு கிறது.

இந்நிலையில் ‘ஆல் பாஸ்’ அறிவிப்புக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நாளை மறு விசாரணை நடத்தப்பட உள்ள நிலையில், தேர்ச்சி சான்றிதழ் வழங்குவது தற்போது நிறுத்தப்பட்டுள் ளது.

ஒருவேளை மாணவர்களுக்கு தேர்வுகளை நடத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தால் அவர்களுக்கு ஆன்லைனில் தேர்வு நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பல்கலைக்கழக நிர்வாகத்தினர் கூறியதாவது: பல்கலை.யைப் பொறுத்தவரை ஆல் பாஸ் அறிவிப்பின் அடிப்படையில் இளநிலை மாணவர்களுக்கு 40 மதிப்பெண்ணும், முதுநிலை மாணவர்களுக்கு 50 மதிப் பெண்ணும் நிர்ணயித்துள்ளோம். கூடுதல் மதிப்பெண் எடுக்க விரும்பும் மாணவர்களுக்கென ஆன்லைன் சிறப்புத் தேர்வு (இம்ப்ரூவ்மெண்ட்) கடந்த அக் டோபரில் நடத்தப்பட்டது. ஆனாலும் இத்தேர்வில் குறைந்த மாணவர்களே பங்கேற்றனர்.

இறுதியாண்டு மாணவர் களுக்கு தேர்வு நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டால், ஆன்லைனில் செமஸ்டர் தேர்வு நடத்த தயாராக இருக்கிறோம் என்றனர்.

SCROLL FOR NEXT