போடியில் அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்த பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி. 
தமிழகம்

திமுக ஆட்சிக்கு வந்தால் கட்ட பஞ்சாயத்து அதிகரித்து விடும்: போடியில் சி.டி.ரவி பிரச்சாரம்

செய்திப்பிரிவு

திமுக ஆட்சிக்கு வந்தால் கட்டப் பஞ்சாயத்தும், ஊழலும் அதி கரித்து விடும் என்று பாஜக தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பேசினார்.

தேனி மாவட்டம் போடியில் பாஜக ஆலோனைக் கூட்டம் நடந்தது. பாஜக தொண்டர்கள், ஒக்கலிக்க கவுண்டர் சமுதா யத்தைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். அதிமுக வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவருக்கு ஆதரவு கேட்டு பாஜக தேசிய பொதுச் செயலாளரும், தமிழக மேலிடப் பொறுப்பாளருமான சி.டி.ரவி பேசியதாவது:

அதிமுகதான் பொங்கல் பரி சாக ரூ.2,500 கொடுத்தது. பயிர்க் கடனை தள்ளுபடி செய்தது. இது போன்ற திட்டங்கள் மூலம் மக் களை நேசிக்கும் கூட்டணியாக அதிமுக-பாஜக உள்ளது. நம் கூட்டணியில் உள்ள கட்சிகளில் யார் வேண்டுமானாலும் தலைவர் கள் ஆகலாம். ஆனால் திமுக, காங்கிரஸில் வாரிசுகள்தான் தலை வராக முடியும்.

பிரதமர் மோடி தமிழகத்துக்கு 11 மருத்துவக் கல்லூரி, 12 ஸ்மார்ட் சிட்டி உள்ளிட்ட ஏராளமான திட்டங்களை கொண்டு வந்துள்ளார். திமுக-காங் கிரஸ்தான் ஜல்லிக்கட்டை தடை செய்தது. அவற்றை உடைத்து வீரவிளையாட்டை மீண்டும் கொண்டு வந்த ஜல்லிக்கட்டு நாயகன் ஓ.பன்னீர்செல்வம்தான்.

திமுக கூட்டணிக் கட்சியினர் முருகன் உட்பட பல்வேறு கடவுள்களை இழிவுபடுத்தியவர் கள். இதை உணர்ந்து செயல் படுங்கள். திமுகஆட்சிக்கு வந்தால் கட்டப் பஞ்சாயத்தும், ஊழலும் அதிகரித்துவிடும். அதற்கு இடம் கொடுத்து விடாதீர்கள். திமுக ஆட்சியில் ஒரு நாளைக்கு 17 மணி நேரம் மின்வெட்டு இருந்தது. தற்போது மின்மிகை மாநிலமாக மாறி உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் ப.ரவீந்திரநாத் எம்பி, எஸ்டிகே.ஜக்கையன் எம்எல்ஏ, முன்னாள் எம்.பி. பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT