குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக அவரது மகன் எம்ஆர்கேபி.கதிரவன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 
தமிழகம்

குறிஞ்சிப்பாடி திமுக வேட்பாளர் எம்ஆர்கே.பன்னீர்செல்வத்திற்கு கரோனா: அவரது மகன் கதிரவன் தீவிர வாக்கு சேகரிப்பு

செய்திப்பிரிவு

குறிஞ்சிப்பாடி தொகுதியில் திமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சரும், கடலூர் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், தொகுதியின் தற்போதைய எம்எல்ஏவுமான எம்ஆர்கே. பன்னீர்செல்வம் போட்டியிருகிறார். அதிமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம் பேட்டியிடுகிறார்.

நாம்தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கூட்டணி ஜனதா தளம்,அமமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் மற்றும் சுயேச்சைகள் போட்டியிடுகின்றன.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை திமுக வேட்பாளர் எம்ஆர்கே.பன்னீர் செல்வத்துக்கு உடல் சோர்வு, உடல் வலி உள்ளிட்டவைகள் ஏற்பட்டது. உள்ளூர் மருத்துவமனையில் அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து திமுக வேட்பாளர் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் மகனும் எம்ஆர்கே.கல்வி குழுமத்தின் தலைவருமான எம்ஆர்கேபி.கதிரவன் நேற்று குறிஞ்சிப்பாடி தொகுதியில் தந்தைக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரத்தில் இறங்கினார்.

திருவந்திபுரம், திரு மாணிக்குழி,ஓட்டேரி ராமாபுரம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் கதிரவன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

SCROLL FOR NEXT