காரைக்குடி தொகுதி சீட் கேட்டு தேவகோட்டையில் ப.சிதம்பரத்தை முற்றுகையிட்டு கோஷமிட்ட முன்னாள் நகராட்சித் தலைவர் வேலுசாமி ஆதரவாளர்கள். 
தமிழகம்

காரைக்குடி தொகுதியை முன்னாள் நகராட்சி தலைவர் வேலுச்சாமிக்கு ஒதுக்கக்கோரி ப.சிதம்பரத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் கட்சியினர்

செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தொகுதி சீட் கேட்டு தேவகோட்டையில் ப.சிதம்பரத்தை முற்றுகையிட்டு வேலுச்சாமி ஆதரவாளர்கள் கோஷமிட்டனர்.

திமுக கூட்டணியில் காரைக்குடி தொகுதி காங்கிரஸுக்கு ஒதுக் கப்பட்டுள்ளது. இத்தொகுதியில் போட்டியிட சீட் கேட்டு சங்கராபுரம் முன்னாள் ஊராட்சித் தலைவர் மாங்குடி, தொழிலதிபர் படிகாசு மகன் பாலு, தேவகோட்டை முன்னாள் நகராட்சித் தலைவர் வேலுச்சாமி ஆகியோர் முயன்று வருகின்றனர். அவர்களில் மாங்குடிக்கு சீட் கிடைக்க வாய்ப் புள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் தேவகோட்டை யில் காங்கிரஸ் வடக்கு வட்டார பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் கூட்டம் நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தலைமை வகித்தார். ஆனால் கூட்டத்துக்குப் பொறுப்பாளர்கள் பலர் வரவில்லை.

இதுகுறித்து கட்சியினரிடம் ப.சிதம்பரம் கேட்டபோது, மஞ்சுவிரட்டுக்குச் சென்று விட்டதாகக் கூறினர். இதனால் கோபம் அடைந்த ப.சிதம்பரம், ‘தேர்தல் நேரத்தில் மஞ்சுவிரட்டு, கோயில் திருவிழா ரொம்ப முக்கி யமா? என்று கேள்வி எழுப்பினார். தொடர்ந்து அவர் சிறிது நேரமே பேசினார்.

பிறகு தேவகோட்டையைச் சேர்ந்த முன்னாள் நகராட்சித் தலைவர் வேலுச்சாமிக்கு காரைக்குடியை ஒதுக்க வேண்டும் என்று கோரி அவரது ஆதரவாளர்கள் ப.சிதம்பரத்தை முற்றுகையிட்டு கோஷமிட்டனர். தொடர்ந்து அவர்கள் ப.சிதம்பரத்திடம் மனு ஒன்றை அளித்தனர். இதனால் அங்கு பர பரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து வேலுச்சாமி கூறியதாவது: நான் தேவ கோட்டை நகராட்சித் தலைவராக இருந்துள்ளேன். ஒரு பைசா கூட லஞ்சம் வாங்காமல் ஏராளமான பணிகளை செய்துள்ளேன். எனக்கு ப.சிதம்பரமும், கே.ஆர்.ராம சாமியும் சீட் பெற்று தருவார்கள் என நம்புகிறேன் என்றார்.

SCROLL FOR NEXT