தமிழகம்

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைப்பு

செய்திப்பிரிவு

இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 14 பேர் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராமேசுவரம், மண்டபம் மீன்பிடி துறைமுகங்களில் இருந்து 800-க்கும் மேற்பட்ட விசைப்படகில் 3,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் புதன்கிழமை கடலுக்குச் சென்ற னர். நெடுந்தீவு அருகே பெனிட்டோ, பூபதி, ஷேக் அப்துல் காதர் ஆகியோருக்குச் சொந்தமான விசைப்படகில் மண்டபம் மீன வர்கள் 8 பேர், ராமேசுவரம் மீன வர்கள் 6 பேர் புதன்கிழமை இரவு மீன் பிடித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது அப்பகுதியில் ரோந்து வந்த இலங்கை கடற் படையினர் 3 விசைப்படகுகளை யும் கைப்பற்றினர். அதில் இருந்த 14 மீனவர்களையும் சிறைபிடித்து காங்கேசன் துறையில் உள்ள யாழ்ப்பாண மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

இவர்களிடம் மீன்வளத் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை செய்தனர். பின்னர் 14 மீனவர்களும் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். இவ்வ ழக்கை விசாரித்த நீதிபதி சபேசன் டிசம்பர் 3 வரை மீனவர்களை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

SCROLL FOR NEXT