ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டித் தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி முத்தம்மாள். 
தமிழகம்

மகா சிவராத்திரியை முன்னிட்டு கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்ட மூதாட்டி

செய்திப்பிரிவு

மகா சிவராத்திரியை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூரில் மூதாட்டி ஒருவர் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஸ்ரீவில்லிபுத்தூர் முதலியார்பட்டித் தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் கடந்த100 ஆண்டுகளாக மகா சிவராத்திரி அன்று நள்ளிரவில் வெறும் கையால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு மகா சிவராத்திரியை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் இப்பகுதியைச் சேர்ந்த முத்தம்மாள் (86) மற்றும் கோயில் பூசாரிகள் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுட்டு எடுத்தனர். பின்னர் அந்த நெய்யை எடுத்துபக்தர்களின் நெற்றியில் பூசிவிட்டு, பிரசாதமாக அப்பத்தை வழங்கினர்.

முன்னதாக கடந்த 40 நாட்கள் விரதம் இருந்து மூதாட்டி முத்தம்மாள் இந்த வைபவத்தை நடத்தினார். கடந்த 48 ஆண்டுகளாக ஒவ்வொரு மகா சிவராத்திரி அன்றும் முத்தம்மாள் கொதிக்கும் நெய்யில் வெறும் கையால் அப்பம் சுடும் நிகழ்வை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT