புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம்தலைமையில் புதிய கூட்டணி அமைகிறது. முதல்கட்ட வேட்பாளர்பட்டியல் இன்று வெளியிடப்படு கிறது. இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் புதுச்சேரி மாநிலச் செயலர் சந்திரமோகன் கூறியதாவது:
புதுச்சேரியில் மக்கள் நீதி மய்யம் தலைமையில் சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சி, சுசி கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை புதிய கூட்டணி அமைத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடுகிறோம். தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. வேட்பாளர் முதல் பட்டியல்மற்றும் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் விவரம் இன்று வெளியிடப்படுகிறது. ஒரு நாள் கழித்துஇரண்டாவது பட்டியல் வெளியாகும். மக்கள் நீதி மய்யத்துக்கு ஆம்ஆத்மி ஆதரவையும் கோரியுள் ளோம் என்று குறிப்பிட்டார்.
ஆம் ஆத்மி போட்டியில்லை
ஆம் ஆத்மி கட்சி வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியி டவில்லை என்று கட்சியின் மாநிலத் தலைவர் ரவி சீனுவாசன் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவரிடம் கேட்ட தற்கு, “கட்சிமேலிடம் வரும் சட்டப் பேரவைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம்என்று தெரிவித்துள்ளனர். மக்களிடம் கட்சியை கொண்டு செல்லும்பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். அதைத்தொடர்ந்து வரும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடுவோம். தற்போது வரும் தேர்தலில் எந்தக் கட்சிக்கு ஆதரவுஎன்பதை கட்சித் தலைமையிடம் கேட்டு முடிவு எடுத்து அறிவிப் போம்” என்று குறிப்பிட்டார்.