அடுத்த 24 மணிநேரத்துக்கு தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை கடந்த 28-ம் தேதி தொடங்கியது. வளி மண்டலத்தில் மேல்அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் ரமணன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கன மழை பெய்யும். குமரி கடல் பகுதியில் கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவு கடற்பரப்பில் நிலை கொண்டுள்ளது.
இதன் காரணமாக அடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும்.
தமிழகத்தில் அதிகபட்சமாக தேனி மாவட்ட, சோத்துப்பாறையில் 10 செ.மீ மழையும், காரைக்குடி, கொடைக்கானல், திருச்செங்கோடு ஆகிய பகுதிகளில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது'' என்று ரமணன் தெரிவித்தார்.