தமிழகம்

உதவி பொறியாளர் தேர்வு மதிப்பெண் வெளியீடு

செய்திப்பிரிவு

ஒருங்கிணைந்த பொறியாளர் பணியில் உதவி பொறியாளர் (சிவில், மெக்கானிக்கல், எலெக்ட்ரிக்கல்), தொழிற்சாலை பாதுகாப்பு உதவி இயக்குநர் ஆகிய பதவிகளில் 98 காலியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு 27.7.2014 அன்று நடத்தப்பட்டது. தேர்வின் முடிவு அக்டோபர் 8-ந் தேதி வெளியிடப்பட்டு 27 முதல் 29-ந் தேதி வரை நேர்முகத்தேர்வு நடைபெற்றது.

இந்த நிலையில் நேர்முகத் தேர்வில் கலந்துகொண்ட விண்ணப் பதாரர்களின் எழுத்துத்தேர்வு, நேர்காணல் மதிப்பெண் விவரங்கள் டிஎன்பிஎஸ்சி இணையதளத் தில் (www.tnpsc.gov.in) வெளியிடப் பட்டுள்ளன. இறுதியாக பணிக்கு தேர்வுசெய்யப்பட்டவர்களின் பட்டியல் விரைவில் வெளியிடப் படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT