தமிழகம்

புதுச்சேரியில் புதிதாக 37 பேருக்கு கரோனா தொற்று: உயிரிழப்பு இல்லை

அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று புதிதாக 37 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்பு ஏதும் இல்லை.

இதுகுறித்து சுகாதாரத் துறைச் செயலர் அருண் இன்று (செவ்வாய்க்கிழமை) கூறியதாவது:

‘‘புதுச்சேரி மாநிலத்தில் 3,763 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 23 பேருக்கும், காரைக்காலில் 4 பேருக்கும், மாஹேவில் 10 பேருக்கும் என மொத்தம் 37 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் புதிதாக யாரும் தொற்றால் பாதிக்கப்படவில்லை. மேலும், உயிரிழப்பும் ஏற்படவில்லை.

இதுவரை 643 பேர் உயிரிழந்துள்ளனர். இறப்பு விகிதம் 1.66 ஆக இருந்து வருகிறது. புதுச்சேரி மாநிலத்தைப் பொறுத்தவரை மொத்தமாகத் தொற்றால் பாதிக்கப்பட்டோர் 38 ஆயிரத்து 706 பேராக உள்ளனர். இவற்றில் தற்போது மருத்துவமனைகளில் 132 பேர் சிகிச்சை பெறும் நிலையில், வீடுகளில் 165 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன் மூலம் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் உட்பட மொத்தம் 297 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று 26 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 766 (97.57 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 5 லட்சத்து 38 ஆயிரத்து 745 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 4 லட்சத்து 95 ஆயிரத்து 682 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது”.

இவ்வாறு அருண் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT