தமிழகம்

மின்சார ரயில்களில் நேரக் கட்டுப்பாடு நீக்கப்படுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பு

செய்திப்பிரிவு

கரோனா ஊரடங்கால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு வழக்கமான மின்சார ரயில்கள் முழு அளவில் இயக்கப்படவில்லை. இருப்பினும், அத்தியாவசிய பணிகளுக்கு செல்லும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஊழியர்கள் பயணம் செய்ய வசதியாக தினமும் 600-க்கும் மேற்பட்ட மின்சார சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

பணி, தொழில், வியாபாரத்துக்காக வெளியே செல்வோருக்கு இது மிகவும் வசதியாக இருக்கிறது. இருப்பினும், அலுவலக நேரம் அல்லாத, நெரிசல் குறைவான நேரத்தில் மட்டுமே பொதுமக்கள் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதன்படி, காலை 7 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையும் அனைவரும் செல்ல முடியாது என நேரக் கட்டுப்பாடு இருப்பதால், பயணிகள் மத்தியில் ஏமாற்றம் இருந்து வருகிறது. பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில், மேற்கண்ட கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

SCROLL FOR NEXT