தமிழகம்

புதுச்சேரியில் புதிதாக 48 பேருக்கு கரோனா தொற்று: குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தைத் தாண்டியது

அ.முன்னடியான்

புதுச்சேரியில் இன்று புதிதாக 48 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று(டிச. 27) தெரிவித்திருப்பதாவது:

‘‘புதுச்சேரி மாநிலத்தில் 2,984 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 34 பேருக்கும், காரைக்காலில் 5 பேருக்கும், ஏனாமில் 3 பேருக்கும், மாஹேவில் 6 பேருக்கும் என மொத்தம் 48 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், காரைக்கால் கே.எம்.ஜி நகரைச் சேர்ந்த 77 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 631 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.66 ஆக உள்ளது.

மோகன்குமார்

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 37 ஆயிரத்து 995 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் மருத்துவமனைகளில் 157 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 202 பேரும் என மொத்தம் 359 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று 43 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 5 (97.39 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 4 லட்சத்து 73 ஆயிரத்து 586 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 4 லட்சத்து 31 ஆயிரத்து 289 பரிசோதனைகள் ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது’’.

இவ்வாறு மோகன்குமார் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT