தமிழகம்

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டரை மாதங்களில் 127 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை ரூ.6.96 கோடி பறிமுதல்; 33 அரசு அதிகாரிகள் கைது

செய்திப்பிரிவு

தமிழகம் முழுவதும் கடந்த இரண்டரை மாதங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 127 இடங்களில்சோதனை நடத்தி, லஞ்சம் வாங்கியதாக 33 அரசு அதிகாரிகளை கைது செய்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தீவிர சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகமாக லஞ்சம் வாங்கப்படும் அலுவலகங்களை குறிவைத்து இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றன. சார் பதிவாளர் அலுவலகங்கள், வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் மின்வாரிய அலுவலகங்கள், நகரதிட்டமிடல் அலுவலகங்கள், டாஸ்மாக் மதுபான கடைகள் என பலதுறைகளில் சோதனை நடத்தினர்.அக்டோபர் 1-ம் தேதி முதல் கடந்த14-ம் தேதி வரை 127 இடங்களில்லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனைகளில் இதுவரை மொத்தம் ரூ.6 கோடியே 96 லட்சத்து 29 ஆயிரத்து 605பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் 7.232 கிலோ தங்கம்,10.52 காரட் வைரம், 9.843 கிலோவெள்ளி, ரூ.37 லட்சம் நிரந்தரவைப்புத் தொகை ஆவணங்கள்போன்றவை கைப்பற்றப்பட் டுள்ளன.

இதில் வேலூர் மண்டல மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரி பன்னீர்செல்வத்தின் வீட்டில் இருந்து ரூ.3 கோடியே 25 லட்சத்து 20 ஆயிரம், 450 பவுன் நகைகள், 6.5 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் அவரது அலுவலகத்தில் இருந்து ரூ.33 லட்சத்து 73 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சென்னை சைதாப்பேட்டைசுற்றுச்சூழல் கண்காணிப்பாளர்பாண்டியன் வீட்டில் இருந்து ரூ.1.37 கோடி, 3 கிலோ 81 கிராம்தங்க நகைகள், 10.52 காரட் வைரங்கள், 3.343 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.37 லட்சம் மதிப்புள்ள நிரந்தர வைப்புத் தொகை ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. அத்துடன் ரூ.7 கோடி மதிப்புள்ள 18 சொத்துஆவணங்களும் கைப்பற்றப்பட் டுள்ளன.

சேலம் மாவட்ட பதிவாளர் துறை டிஐஜி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் ரூ.1 கோடி, ஊரப்பாக்கம் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரிடம் இருந்து ரூ.62 லட்சம், நாமக்கல் நகர திட்டமிடல் இயக்குநர் அலுவலகத்தில் ரூ.5.25 லட்சம், திண்டுக்கல் புவியியல் மற்றும் சுரங்கத்துறை இணை இயக்குநர் பெருமாளிடம் இருந்து ரூ.4.10 லட்சம், தேனி மாவட்ட சார் பதிவாளர் பாலமுருகனிடம் இருந்து ரூ.4.09 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

127 இடங்களில் நடத்தப்பட்டசோதனைகளில் 33 அரசு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்த தகவலை லஞ்சஒழிப்பு போலீஸார் தெரிவித் துள்ளனர்.

SCROLL FOR NEXT