முதல்வர் பழனிசாமி: கோப்புப்படம் 
தமிழகம்

சண்முகா நதி நீர்த்தேக்கத்திலிருந்து வரும் 15-ம் தேதி முதல் 50 நாட்களுக்குத் தண்ணீர் திறப்பு: முதல்வர் பழனிசாமி உத்தரவு

செய்திப்பிரிவு

சண்முகா நதி நீர்த்தேக்கத்திலிருந்து வரும் 15-ம் தேதி முதல் 50 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (டிச.11) வெளியிட்ட அறிக்கை:

"தேனி மாவட்டம், சண்முகா நதி நீர்த்தேக்கத்தின் கீழ் உள்ள உத்தமபாளையம் வட்டத்தைச் சார்ந்த புன்செய் நிலங்கள் பயன்பெறும் வகையில் சண்முகா நதி நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீர் திறந்துவிடுமாறு விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.

விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, தேனி மாவட்டம், சண்முகா நதி நீர்த்தேக்கத்திலிருந்து விநாடிக்கு 14.47 கன அடி வீதம், 15.12.2020 முதல் 50 நாட்களுக்குத் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.

இதனால், தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டத்தைச் சார்ந்த ராயப்பன்பட்டி, மல்லிங்காபுரம், சின்ன ஓவுலாவுரம், எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வைபட்டி, அழகாபுரி, ஓடைப்பட்டி மற்றும் சீப்பாலக்கோட்டை ஆகிய 8 வருவாய் கிராமங்களிலுள்ள 1,640 ஏக்கர் புன்செய் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், விவசாயிகள் நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT