தமிழகம்

ஊரடங்கு, கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்படுமா?- முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை

செய்திப்பிரிவு

ஊரடங்கில் தற்போதுள்ள கட்டுப்பாடுகளை நீட்டிப்பதா? தளர்வுகள் அளிப்பதா? என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடன் முதல்வர் பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.

தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25-ம்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்பின், அடுத்தடுத்து ஊரடங்கு நீட்டிக்கப்படும்போது பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. அந்த வகையில், கடந்த அக்டோபர் இறுதியில் 10-ம் கட்டமாக நவ. 30-ம்தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

தற்போது ஊரடங்கு காலம் நிறைவடையும் நிலையில், அடுத்த கட்டமாக, தற்போதுள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை தொடர்வதா? தளர்வுகளை அளிப்பதா? என்பது குறித்து முதல்வர் பழனிசாமி இன்று முடிவு செய்கிறார்.

இதற்காக மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி வாயிலாக இன்று காலை ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து, இன்று பிற்பகல் மருத்துவ நிபுணர் குழுவினருடன் ஆலோசனை நடத்துகிறார்.

SCROLL FOR NEXT