திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. 
தமிழகம்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலையார் கோயிலில் 1,008 சங்காபிஷேகம்

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைதீபத் திருவிழாவில் 1,008 சங்காபிஷேகம் நேற்று நடைபெற்றது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைதீபத் திருவிழா நடைபெற்று வருகிறது. துர்க்கை அம்மன் உற்சவத்துடன் தொடங்கிய தீபத் திருவிழா, 17 நாட்களுக்கு நடைபெறும். இதன் முக்கிய நிகழ்வாக வரும்29-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்பட உள்ளது.

இந்நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவின் 3-ம் நாள்உற்சவத்தில், 1,008 சங்காபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. இதையடுத்து, விநாயகர் மற்றும்சந்திரசேகரர் உற்சவம் நடைபெற்றது. அதன்பிறகு, பஞ்சமூர்த்திகளின் உற்சவம் இரவு நடைபெற்றது. 5-ம் பிரகாரத்தில் நடைபெற்ற சுவாமி உற்சவத்தில், பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

கார்த்திகை தீபத் திருவிழாவின் 4-ம் நாள் உற்சவத்தில் விநாயகர் மற்றும் சந்திரசேகரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பவனி வர உள்ளனர். இதையடுத்து, பஞ்சமூர்த்திகளின் உற்சவம் இரவு நடைபெற உள்ளது. இதற்கிடையில், கொடி மரம் அருகே பிரார்த்தனை உண்டியல் நேற்று வைக்கப்பட்டுள்ளது. அதில், பக்தர்கள் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

SCROLL FOR NEXT