ராமேசுவரம் அருகேயுள்ள பாம்பனில் மீனவர்கள் வலையில் சிக்கிய 6 அடி நீள கத்தி மீன்.

 
தமிழகம்

ராமேசுவரம் அருகே பாம்பனில் மீனவர் வலையில் சிக்கிய 6 அடி ராட்சத கத்தி மீன்

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: ​பாம்​பன் மன்​னார் வளை​குடா பகு​தி​யில் நேற்று விசைப்​படகு மீனவர் வலை​யில் 6 அடி நீளராட்சத கத்தி மீன் சிக்கியது. ராமேசுவரம் அருகே பாம்​பன் மன்​னார் வளை​குடா பகு​தி​யில் மீன்​பிடித்த பாம்​பன் அருளானந்​தம் என்ற மீனவரின் வலை​யில் 6 அடி நீள​மும், 25 கிலோ எடை​யும் கொண்ட ராட்சத கத்தி மீன் ஒன்று சிக்கியது.

இந்த மீன் கிலோ ரூ.250 வீதம் ரூ.6,250-க்கு விலை​போனது. இதுகுறித்து பாம்​பன் மீனவர்​கள் கூறிய​தாவது: கடல்​வாழ் உயி​ரினங்​களில் மிக வேக​மாக நீந்​தக் கூடியவை இந்த கத்தி மீன்​கள். மணிக்கு சராசரி​யாக 100 கி.மீ. வரை​யிலும் நீந்​தும் திறன் கொண்​ட​வை.

மயி​லின் தோகை போன்று இந்த மீனின் துடுப்​பு​கள் இருப்​ப​தால், பாம்​பன் மீனவர்​கள் இதை மயில் மீன் என்​றும் அழைக்​கின்​றனர். இந்​தி​யப் பெருங்​கடலில் கூட்​டம் கூட்​ட​மாகக் காணப்​படும் கத்தி மீன்​கள், மன்​னார் வளை​கு​டாப் பகு​திக்கு இனப்​பெருக்​கத்​துக்​காக வந்​திருக்​கலாம்.

இந்த மீனின் தாடை வாள் போன்று இருப்​ப​தால், அதைப் பயன்​படுத்தி மற்ற மீன்​களை தனி​யாகவே வேட்​டை​யாடும். கடலின் மேற்​பரப்​பில் தாவி தாவி நீந்​தும்​போது, படகில் உள்ள மீனவர்​களை தனது தாடை​யால் தாக்கி ஆழமான காயங்​களை ஏற்​படுத்தி விடு​வதும் உண்​டு.

2 லட்​சம் கிலோமீட்​டர்... ஒரு கத்தி மீன் தனது வாழ்​நாளில் சராசரி​யாக 2 லட்​சம் கிலோ மீட்​டர் தொலைவு வரை​யிலும் நீந்​தி, வெவ்​வேறு கடல் பகு​திக்கு இடமாறிக்​கொண்டே இருக்​கும். இதனால், இதன் இருப்​பிடத்​தைக் கண்​டு​பிடித்து இதைப் பிடிக்க முடி​யாது. இவ்​வாறு அவர்​கள் கூறினர்.

SCROLL FOR NEXT