இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட நாகை மீனவர்கள் 15 பேரையும் 28 படகுகளையும் விடுவிக்க உறுதியான நட வடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதி யுள்ளார்.
இது தொடர்பாக பிரதமருக்கு அவர் நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
நாகப்பட்டினம் மீன்பிடி தளத் தில் இருந்து கடந்த 21-ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 15 மீனவர் களை இலங்கை கடற்படையினர் கைது செய்து, அங்குள்ள காங் கேசன் துறைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். தமிழ கத்தின் பாரம்பரிய மீன்பிடி பகுதியான கச்சத்தீவு பகுதியில் மீனவர்களை தொடர்ந்து கைது செய்வது, தமிழக மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த மீனவர் களின் 26 மீன்பிடி படகுகள் இன்னும் இலங்கையின் வசம் உள்ளது என்பது தங்களுக்கு தெரியும். அப்பாவி ஏழை மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு துணையாக இருப்பது படகுகளும், மீன்பிடி சாதனங்களும்தான். அவற்றை இலங்கை கடற்படையினர் வேண்டு மென்றே விடுவிக்காமல் தங்கள் வசம் வைத்துள்ளனர்.
நீண்டகால மாக பிடித்து வைக்கப்பட்டுள்ள இந்த படகுகளால் மீனவர்களுக்கு மிகப்பெரிய அளவில் பாதிப்பு ஏற்படும்.
கச்சத்தீவு தொடர்பாக கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் இந்தியா - இலங்கை இடையே போடப்பட்ட ஒப்பந்தங்கள், அரசிய லமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். தமிழக அரசும் இந்த வழக்கில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளது.
புவியியல், கலாச்சாரம், வரலாற்று ரீதியாக கச்சத்தீவு, இந்தியாவின் ஒருபகுதி என்பதே எங்கள் நிலைப்பாடு. கச்சத்தீவை மீட்பதால் லட்சக்கணக்கான மீனவர் களின் பாதுகாப்பு மற்றும் வாழ் வாதாரத்தை உறுதி செய்ய முடியும். இதற்கு சரியான தீர்வை தங்கள் அரசு கண்டறியும் என நம்புகிறேன்.
தற்போது, இலங்கை கடற்படை யால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டுள்ள 15 மீனவர் கள் மற்றும் 28 படகுகளை உடனடி யாக விடுவிக்க உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.இவ்வாறு கடிதத்தில் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.