தமிழகம்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தளர்வு இல்லாத முழு ஊரடங்கு அமல்: போலீஸார் கெடுபிடியால் சாலைகள் வெறிச்சோடின

செய்திப்பிரிவு

கரோனா தொற்றை கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும், ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. போலீஸார் கெடுபிடி காரணமாக வாகன போக்குவரத்து குறைந்து மாநிலம் முழுவதும் முக்கிய சாலைகள் வெறிச்சோடின.

சென்னையில் கரோனா தொற்றுகுறைந்து வருகிறது. அதேநேரம்பிற மாவட்டங்களில் தொற்று அதிகரித்து வருகிறது. ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் கூடுவதைத் தடுக்க கடந்த மாதம் போன்று இந்த மாதமும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

அதன்படி 2-வது ஞாயிற்றுக்கிழமையான நேற்று மாநிலம் முழுவதும் தளர்வுகள் இல்லாதமுழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட் டது.

சென்னையில் மருந்து, பால்கடைகள் தவிர, காய்கறி, மளிகை கடைகள், பெட்ரோல் பங்க்குகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் நேற்று மூடப்பட்டிருந்தன. திருமழிசை காய்கறிச் சந்தை, மாதவரம் பழச்சந்தை, காசிமேடு மீன் சந்தை ஆகியவையும் நேற்று செயல்படவில்லை.

193 சோதனைச் சாவடிகள்

மாநகரம் முழுவதும் 193 இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்து, அத்தியாவசிய காரணம் இன்றி வாகனங்களில் சுற்றியவர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர். இதன் காரணமாக அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, பழையமாமல்லபுரம் சாலை உள்ளிட்டசாலைகள் வாகனப் போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன.

இதேபோல், கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி, சேலம் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் சோதனைச் சாவடிகள் அமைத்து போலீஸார் தீவிரமாகக் கண்காணித்தனர்.இதனால் பொதுமக்கள் வீடுகளில் முடங்கியதால் முக்கிய சாலைகள் வாகனப் போக்குவரத்து இன்றி வெறிச்சோடின.

பல்வேறு பகுதிகளில் சாலையோரத்தில் ஆதரவற்ற நிலையில் உள்ள மக்களுக்கு தன்னார் வலர்கள் உணவு வழங்கினர்.

SCROLL FOR NEXT