தமிழகம்

மெக்காவில் உயிரிழந்தவர்களுக்கு பேரவையில் இரங்கல்

செய்திப்பிரிவு

மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

நேற்று காலை சட்டப்பேரவை தொடங்கியதும் பேரவைத் தலைவர் பி.தனபால், ‘‘சவூதி அரேபிய நாட் டின் மெக்காவில் ஏற்பட்ட கூட்ட நெரி சலில் சிக்கி 700-க்கும் அதிகமா னோர் உயிரிழந்துள்ளனர். பலர் காய மடைந்துள்ளனர். இறந்தவர்களுக்கு தமிழக சட்டப்பேரவை அனு தாபத்தை தெரிவித்துக் கொள்கிறது. இறந்தவர்களுக்கு இரங்கல் தெரி விக்கும் தீர்மானத்தை நிறைவேற்றும் வகையில் 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்த வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார்.

அதனைத் தொடர்ந்து உறுப்பினர்கள் அனைவரும் எழுந்து நின்று 2 நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.

SCROLL FOR NEXT