தமிழகம்

8.93 லட்சம் டன் உணவு தானியம்: தமிழகத்துக்கு இந்திய உணவுக் கழகம் ஒதுக்கியது

செய்திப்பிரிவு

‘பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தின்கீழ், 5 மாதங்களுக்கு இலவசமாக வழங்குவதற்காக தமிழகத்துக்கு 8.93 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்களும், புதுச்சேரிக்கு 3 ஆயிரத்து 171 மெட்ரிக் டன் அரிசியும் இந்திய உணவுக் கழகம் ஒதுக்கி உள்ளது.

‘பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா’ திட்டத்தின்கீழ், பொதுமக்களுக்கு 5 கிலோ அரிசி,கோதுமை இலவசமாக வழங்கும் திட்டத்தை மேலும் 5 மாதங்கள் அதாவது, ஜூலை முதல் நவம்பர் வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

இத் திட்டத்தின்கீழ், தமிழகத்தில் 1.11 கோடி பயனாளிகள் 5 கிலோ அரிசி, கோதுமை பெறுவார்கள். இதற்காக, தமிழகத்துக்கு 8.93 லட்சம் மெட்ரிக் டன்களும், (8.54 லட்சம் மெட்ரிக் டன் அரிசிமற்றும் 39 ஆயிரத்து 307 மெட்ரிக்டன் கோதுமை) மற்றும் புதுச்சேரிக்கு 3 ஆயிரத்து 171 மெட்ரிக் டன் அரிசியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில், ஜூலை மற்றும் ஆகஸ்ட்மாதங்களுக்கான 3.56 லட்சம் மெட்ரிக் டன்னில் 2.54 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் தமிழக அரசிடம் வழங்கப்பட்டுள்ளதாக இந்திய உணவுக் கழகம் தெரிவித் துள்ளது.

SCROLL FOR NEXT