தென்காசியில் இன்று ஒரே நாளில் மேலும் 92 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1017 ஆக அதிகரித்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் நேற்று வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 925 பேர் கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதில் 561 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், இன்று ஒரே நாளில் மேலும் 92 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1017 ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்று உட்பட பல்வேறு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அச்சன்புதூரைச் சேர்ந்த 75 வயது முதியவர், புளியங்குடியைச் சேர்ந்த 56 வயது பெண் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.