வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து அவதூறு பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வைப்பாறில் மறியல் செய்த மக்கள்.
சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மன் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியவர் மீது நடவ டிக்கை எடுக்காததைக் கண்டித்து, தூத்துக்குடி மாவட்டம், வை ப்பாறு கிராமத்தில் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்துக்கு வைப்பாறு ஊராட்சி முன்னாள் தலைவர் செண்பகபெருமாள் தலைமை வகித்தார். சின்னப்பன் எம்எல்ஏ , வட்டாட்சியர் ராஜ்குமார் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அவதூறு பரப்பியவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர்.