திருப்புவனம் அருகே கொந்தகையில் அகழாய்வு பணி தொடங்கியது. 
தமிழகம்

ஊரடங்கால் நிறுத்தப்பட்ட கொந்தகை அகழாய்வுப் பணி 63 நாட்களுக்குப் பிறகு மீண்டும் தொடக்கம்

இ.ஜெகநாதன்

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கொந்தகையில் ஊரடங்கால் நிறுத்தப்பட்ட அகழாய்வு பணி இன்று மீண்டும் தொடங்கியது.

கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் பிப்.19-ம் தேதி ஆறாம் கட்ட அகழாய்வு பணியை முதல்வர் பழனிசாமி தொடங்கி வைத்தார்.

முதற்கட்டமாக கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே குழிகள் தோண்டப்பட்டன. மணலூரில் பணிகள் தொடங்கவில்லை. மேலும் ஊரடங்கால் மார்ச் 24-ம் தேதி அகழாய்வு பணியை தொல்லியல்துறை நிறுத்தியது.

இந்நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டநிலையில் மே 20-ம் தேதி மீண்டும் கீழடி, அகரத்தில் அகழாய்வு பணி தொடங்கியது.

தொடர்ந்து மே 23-ம் தேதி மணலூரிலும் பணிகள் தொடங்கின. மழைநீர் தேங்கி இருந்ததால் கொந்தகையில் தொடங்கவில்லை. இந்நிலையில் 63 நாட்களுக்கு பிறகு கொந்தகையில் இன்று அகழாய்வு பணி தொடங்கியது.

ஊழியர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பணி செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT