சென்னையில் பல ஆண்டுகளாக சாலையோரங்கள், தெருக்களில் கேட்பாரற்று, உரிமை கோரப்படாமல் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள்.

 
தமிழகம்

சென்னையில் பல ஆண்டுகளாக கேட்பாரற்று கிடந்த 5,543 வாகனங்கள் ஏலம்

செய்திப்பிரிவு

சென்னை: சென்னையில் பல ஆண்​டு​களாக சாலை​யோரங்​கள் மற்​றும் தெருக்​களில் கேட்​பாரற்​று, உரிமை கோரப்​ப​டா​மல் நிறுத்​தப்​பட்​டிருந்த 5,543 வாக​னங்​களை போலீ​ஸார் கண்​டெடுத்து கைப்​பற்​றி​யுள்​ளனர். அவை​ ஏலம் விடப்பட உள்​ளன.

சென்​னை​யில் கேட்​பாரற்று கிடக்​கும் வாக​னங்​களை கண்​டறிந்​து, உரிய​வர்​களிடம் ஒப்​படைக்க வேண்​டும் என்று காவல் ஆணை​யர் அமல்​ராஜ் போலீ​ஸாருக்கு உத்​தர​விட்​டார்.

இதையடுத்​து, சென்​னை​யில் உள்ள 12 காவல் மாவட்ட துணை ஆணை​யர்​கள் தலை​மை​யில் போலீ​ஸார் தங்​கள் எல்​லைக்​குட்​பட்ட பகு​தி​களில் தீவிர சோதனை நடத்​தினர்.

அப்​போது, நீண்ட கால​மாக சாலை​யோரம், தெருக்​களில் கேட்​பாரற்று கிடந்த 5,543 வாக​னங்​கள் கண்​டெடுக்​கப்​பட்​டன. உரிமை​யாளர்​கள் யாரும் உரிமை கோராத நிலை​யில், இந்த வாக​னங்​களை ஏலத்​தில் விற்​பனை செய்​வதற்​காக அவை சென்னை மாநக​ராட்​சி​யிடம் ஒப்​படைக்​கப்​பட்​டன.

இதில் மாநக​ராட்சி மூலம் மதிப்​பீடு செய்​யப்​பட்ட 1,936 வாக​னங்​கள் நேற்று முதல் மின்​னணு ஏலத்​தில் விடும் பணி தொடங்கி உள்​ளது. மீத​முள்ள 3,607 வாக​னங்​களும் மதிப்​பீடு செய்​யப்​பட்​டு, மின்​னணு ஏலத்​தில் விடு​வதற்​கான நடவடிக்​கை​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

அவற்​றுக்​கான ஏல தேதி​கள் பின்​னர் அறிவிக்​கப்​படும். இதற்​கிடையே, சென்னை காவல் எல்​லைக்​குட்​பட்ட காவல் நிலை​யங்​களில் போதைப்​பொருள் வழக்​கு​களில் கைப்​பற்​றப்​பட்ட 81 இருசக்கர வாக​னங்​கள், 12 மூன்று சக்கர வாக​னங்​கள், 9 இலகுரக வாக​னங்​கள் என மொத்​தம் 102 வாக​னங்​களும் ஏலம் விடப்பட உள்​ளன.

இதற்​காக சம்​பந்​தப்​பட்ட நீதி​மன்​றங்​களின் உத்​தர​வு​கள் மற்​றும் வாகன மதிப்​பீடு​கள் பெறப்​பட்​டு, இணை​யதளம்​ மூலம்​ மின்​னணு ஏலம்​ நடத்​து​வதற்​​கான நடவடிக்​கை​கள்​ மேற்​கொள்​ளப்​பட்​டு வரு​கின்​றன.

SCROLL FOR NEXT