மதுரை மாவட்டத்தில் கரோனா தடுப்புப் பணிகளை வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறார். ஊரடங்கு அமலில் இருப்பதால் நடனக் கலைஞர்கள், கிராமிய, தவில், நாகஸ்வரக் கலைஞர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், தூய்மைப் பணி யாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினருக்கும் உணவுப் பொருட் கள், முகக் கவசம், சானிடைசர், கபசுரக் குடிநீர் உள்ளிட்டவற்றை அவர் வழங்கி வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக மதுரை திருமோகூர் காளமேகப் பெருமாள் கோயில் அர்ச்சகர்களுக்கு உண வுப் பொருட்களை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேற்று வழங் கினார்.
நிகழ்ச்சியில் உயர் நீதிமன் றக் கிளை வழக்கறிஞர் ராம கிருஷ்ணன், நெல்லை பாலு உட் பட பலர் கலந்து கொண்டனர்.