தமிழகம்

ஏப்ரல் 20-ம் தேதி நிலவரம்: மாவட்ட வாரியாக கரோனா தொற்று உள்ளவர்களின் பட்டியல்

செய்திப்பிரிவு

ஒவ்வொரு மாவட்டத்திலும் கரோனா வைரஸ் தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்ற பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தியிருந்தார் பிரதமர் மோடி. அதனை மே 3-ம் தேதி வரைக்கும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.

ஒவ்வொரு நாள் மாலையும், மாவட்ட வாரியாக கரோனா தொற்று எத்தனை பேருக்கு இருக்கிறது என்கிற விவரத்தை தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (ஏப்ரல் 20) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க 1520 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

எந்த மாவட்டத்தில் எத்தனை பேருக்கு கரோனா தொற்று?- பட்டியல் இதோ:

மாவட்டம் ஏப்ரல் 19 வரை ஏப்ரல் 20 மொத்தம்
1 சென்னை 285 18 303
2 கோயம்புத்தூர் 133 133
3 திருப்பூர் 108 1 109
4 திண்டுக்கல் 74 2 76
5 ஈரோடு 70 70
6 திருநெல்வேலி 62 62
7 செங்கல்பட்டு 53 53
8 நாமக்கல் 50 50
9 திருச்சி 46 4 50
10 திருவள்ளூர் 46 2 48
11 மதுரை 46 46
12 தஞ்சாவூர் 46 46
13 நாகப்பட்டினம் 43 43
14 தேனி 43 43
15 கரூர் 42 42
16 ராணிப்பேட்டை 39 39
17 விழுப்புரம் 33 3 36
18 திருவாரூர் 26 1 27
19 தூத்துக்குடி 26 1 27
20 கடலூர் 26 26
21 தென்காசி 22 4 26
22 சேலம் 24 24
23 வேலூர் 22 22
24 விருதுநகர் 19 19
25 திருப்பத்தூர் 17 17
26 கன்னியாகுமரி 16 16
27 சிவகங்கை 11 1 12
28 திருவண்ணாமலை 12 12
29 ராமநாதபுரம் 10 1 11
30 காஞ்சிபுரம் 9 9
31 நீலகிரி 9 9
32 பெரம்பலூர் 4 1 5
33 அரியலூர் 2 2 4
34 கள்ளக்குறிச்சி 3 3
35 புதுக்கோட்டை 0 1 1
மொத்தம் 1,477 43 1,520
SCROLL FOR NEXT