தாம்பரம் அமரர் ஜீவா நினைவு அறக்கட்டளையின் கீழ் இயங்கும் அவ்வை நடுநிலைப் பள்ளியில் நேற்று 64-வது ஆண்டு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் சென்னை முன்னாள் மேயர் மற்றும் மனிதநேய அறக்கட்டளையின் தலைவர் சைதை சா.துரைசாமி கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கினார். மாணவர்கள் கல்வி கற்க வேண்டியதன் அவசியத்தையும், உணவுக் கட்டுப்பாட்டின் முக்கியத்துவத்தையும் சைதை சா.துரைசாமி தனக்கே உரிய பாணியில் சிறப்பாக உரையாற்றினார்.
இவ்விழாவில் பன்னாட்டு அரிமா சங்கங்களின் மாவட்ட ஆளுநர் துளசிங்கம், அகில இந்திய வங்கி அலுவலர் சங்கச் செயலர் ஜி.வி.மணிமாறன், ஜி.வடிவேலு, கவிஞர் ஜீவபாரதி, கவிஞர் எழில்வேந்தன், முனைவர் ஆர்.முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
விழாவிற்கு வந்தவர்களை பள்ளிச் செயலாளர் ஜீ.மணிகுமார் வரவேற்றார். தலைமையாசிரியை மு.ரத்தினமாலா ஆண்டறிக்கை வாசித்தார்.